இலங்கையின் ஆயுதப் படைகளின் திறனை கட்டியெழுப்புவதில் இந்தியா உறுதி – பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு!

Friday, June 9th, 2023

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் ஆயுதப் படைகளின் திறன் மற்றும் திறனைக் கட்டியெழுப்புவதை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமனே தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்தியா-இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில்” அவர் தனது காணொளி உரையிலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பயங்கரவாதம், கடற்கொள்ளை, போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு போன்ற இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்தார்.

மேலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த சவால்களை சமாளிக்க மேம்படுத்தப்பட்ட மற்றும் செயலூக்கமான ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சாகர்  எனப்படும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்பது இந்தியாவின் கடல்சார் கொள்கையின் அடிப்படைக் கருப்பொருளாக அரமனே குறிப்பிட்டார்.

இந்த தொலைநோக்குப் பார்வையானது பிராந்தியத்தில் உள்ள ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதிலும், இந்தியாவின் திறனைப் பயன்படுத்தி அதன் நட்பு நாடுகளுக்கு பொதுவான கடல்சார் அண்டை நாடுகளுக்குப் பயனளிப்பதிலும் வேரூன்றியுள்ளது.

இந்தியாவின் முன்னுரிமைப் பங்காளியாக இலங்கையை விவரித்த அவர், அண்டை நாட்டின் ஆயுதப் படைகளின் திறனைக் கட்டியெழுப்புவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறை ஒரு பெரிய புரட்சியின் உச்சியில் நிற்கிறது என்றும், ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுமை மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஒரு வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உள்நாட்டு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவதில் கவனம் செலுத்துவதாக பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: