இலங்கையர்கள் அனைவருக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை – பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவிப்பு!
Sunday, March 14th, 2021இலங்கையர்கள் அனைவருக்கும் புதிதாக பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனப்படையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதிமுதல் இந்த பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அதில் ஒவ்வொரு நபருடைய பிறப்புமுதல் இறப்பு வரையான தகவல்கள் அடங்கிய தரவுகள் கணினிமயமாக்கப்படும் எனவும் பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பதிவாளர் நாயகம் வீரசேகர தற்போது உள்ள பிறப்பு சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டு புதிய தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீரென மயங்கி வீழ்ந்தவர் சாவு - 4 நாள்களில் 4 ஆவது சம்பவம்!
அரசியல் கட்சிகளிடம் பொது நிலைப்பாடொன்று இல்லை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
ஐநாவின் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று!
|
|