இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!

Friday, December 22nd, 2017

இரட்டை குடியுரிமை பெறுவதில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம்தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாககுடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரால் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் 3 லட்சம் ரூபாய் பணமும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தலா 50000 ரூபாய் பணமும் செலுத்தவேண்டும்.

பாரிய அளவில் இரட்டை குடியுரிமை பெறும் விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அதனைப் பரிசோதித்துபொருத்தமானவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் விரைவாக நடவடிக்கைமேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: