இலங்கைக்கு வந்து குவியும் இந்திய, இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
Monday, March 28th, 2022
இந்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரையில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 121 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, மார்ச் 24 ஆம் திகதி வரை 84 ஆயிரத்து 287 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 96 ஆயிரத்து 507 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மார்ச் 1 முதல் 24 வரை, 18 ஆயிரத்து 863 இந்திய சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 8,779 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அந்த காலகட்டத்தில் ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8008 ஆகும். ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து, அமெரிக்கா, கஜகஸ்தான், கனடா மற்றும் ஈரான் ஆகியவை அந்தக் காலகட்டத்தில் முக்கிய சுற்றுலா நாடுகளாக இருந்தன.
இதேவேளை ஜனவரி 1ஆம் திகதிமுதல் மார்ச் 24ஆம் திகதி வரை 43 ஆயிரத்து 358 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 826 ஆகும்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 26 ஆயிரத்து 863 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 20 ஆயிரத்து 740 சுற்றுலாப் பயணிகளும், பிரான்சிலிருந்து 13,780 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


