இலங்கைக்கு வந்துள்ளது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்!

Wednesday, April 18th, 2018

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ் ஏ.என்.225 ரக விமானம் இன்று(18) காலை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் மலேஷியா கோலாலாம்பூரில் இருந்து பாகிஸ்தான் கராச்சி நகரிற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற போதே மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிரப்பல் மற்றும் பணியாளர்களின் தேவை காரணமாக தரையிறக்கப்பட்டுள்ள குறித்த விமானம், நாளை காலை மீண்டும் கராச்சி நோக்கி பயணிக்கவுள்ளது.

இந்த விமானத்தில் 2 லட்சம் மெற்றிக் டொன் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

image

Related posts:

முகக்கவசம் அணியாத எந்த வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் - யாழ் ம...
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இதுவரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு - உதவி தேர்தல் ஆணையாளர...
பொலிஸ் உத்தியோகத்தர் பிரசன்னமின்றி குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் கையகப்படுத்த முடியாது - பொ...

தமிழ் மக்கள் மத்தியில் நிகழும் அரசியல் மாற்றமே தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை மாற்றியெழுதும் - ஈ.பி...
அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கான வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் யோசனைக்கு அமைச்சரவை அனு...
இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச விசாரணைகள் என்ற யோசனையை அரசாங்கம் அங்கீகரிக்காது - ஜனாதிபதியின்...