இலங்கைக்கு மற்றுமொரு பாரிய உதவியை வழங்குகிறது இந்தியா – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
Thursday, April 21st, 2022
இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலதிகமாக 500 மில்லியன் டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
அத்துடன் பங்களாதேஷுக்கு வழங்க வேண்டிய 450 மில்லியன் டொலர்களை ஒத்திவைக்க அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
“சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் (IMF) எங்களை வந்தடைய சுமார் ஆறு மாதங்கள் ஆகும்,
அது தவணை முறையில் கிடைக்கும்” என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விவசாயத் திணைக்களத்தில் ஆளணி வெற்றிடங்களால்பணிகளை முன்னகர்த்த முடியாத நிலைமை
தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரிய...
பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள 50 ரஷ்ய உளவாளிகள். விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!
|
|
|


