இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்க நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!

Saturday, May 7th, 2022

இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், 74 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியுதவியினை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

25 மாவட்டங்களைச் சேர்ந்த குறைந்த வருமானத்தை பெறும் சுமார் 80,000 குடும்பங்கள் இதன்மூலம் நன்மையடையவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: