இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை – இந்தியா!
Monday, March 15th, 2021ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான குழுக்கள் முன்வைத்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா என்பது தொடர்பில் இந்தியா எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அத்துடன் குறித்த தீர்மானத்தின் மீது இந்தியா உறுதியற்றதாகவே இருந்தது. எனினும் 13 வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த இந்தியா இலங்கையை வலியுறுத்தியது.
மேலும் தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்த நாடுகளில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் கியூபா ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விமானத்தில் தீ விபத்து – மத்தள விமான நிலையத்தில் பதற்றம்!
டெங்கு தொற்று - கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு பூட்டு!
தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்...
|
|
பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது – வைத்தியர் ...
கொரோனா தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்க...
புதிய வேலைத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது - அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு திறைசேரி சுற்ற...