இலங்கைக்கான நன்கொடை அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடை அதிகரித்தது இந்தியா!

Saturday, September 2nd, 2023

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நன்கொடை அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை இந்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், இந்திய ௲ இலங்கை உயர் பெறுபேற்று சமூக அபிவிருத்தி திட்டம் என்ற கட்டமைப்பின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 9 திட்டங்களுக்குமான இறுதி ஒதுக்கீடானது 50 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பினைத் தொடர்ந்து குறித்த 9 திட்டங்களுக்குமான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடானது 3 பில்லியன் இலங்கை ரூபாவினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் வரையிலான சகல துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: