இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான வரி குறைப்பு!
Saturday, January 7th, 2017இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி மீதான வரி 80 ரூபாவிலிருந்து 15 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
தீர்வை வரி, தேச நிர்மாண வரி உள்ளிட்ட மேலும் பல வரிகள் காரணமாக இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் அரிசி மீதான வரி 80 ரூபா வரை அதிகரித்திருந்தது.புதிய தீர்மானத்திற்கு அமைய, இறக்குமதி செய்யடும் அரிசி மீதான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு, விசேட 15 ரூபா சந்தை வரியை மாத்திரம் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரித் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
Related posts:
விளையாட்டுத்துறையிலும் பின்தள்ளப்பட்ட வடக்கு மாகாணம்!
சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!
பிராந்திய கிளைகள் ஊடாக மேலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் - கொழும்பு...
|
|