இரு வகையான பேருந்து கட்டணங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை –இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Monday, January 24th, 2022

பேருந்துகளின் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை நடத்துநர்கள் தொடர்ந்தும் ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான பேருந்து கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நிற்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..

கடந்த வாரம் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்து இருக்கை கொள்ளளவுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து பேருந்துகளையும் பறிமுதல் செய்யுமாறும், பெரும்பாலான பகுதிகளில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கிராமப்புற வீதிகளில் விதிமுறை மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால், பேருந்துகளில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தனியான கட்டணம் அறிமுகப்படுத்தப்படும்.

இருக்கைகள் கிடைக்காத பட்சத்தில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிப்பதற்கான கட்டணத்தை பயணிகள் செலுத்த முடியும்.

பேருந்து நடத்துனர்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால், நாட்டின் நிலைமைக்கு ஏற்ப திருப்திகரமான கட்டணத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், மாற்று வழிகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பேருந்து நடத்துனர்களும் அரசாங்கம் முன்வைக்கும் விதிமுறைகளை ஏற்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் பேருந்துகளில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு அரசாங்கம் தனியான கட்டணத்தை விதிக்கும். அதன் பின்னர் அது திருத்தப்படாது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: