இரு அமைச்சு பதவிகளில் திருத்தங்கள்!
Friday, July 26th, 2019
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகிக்கும் அரச நிர்வாக இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவி அரச நிர்வாக, இடர் முகாமைத்துவம் மற்றும் பண்ணை வள அபிவிருத்தி அமைச்சு பதவி என்பதாக திருத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர் பீ.ஹரிசன் வகிக்கும் விவசாய, பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுப் பதவி விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுப் பதவியாக திருத்தப்பட்டுள்ளது.
இவ்விரு அமைச்சர்களுக்கும் புதிய நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
Related posts:
ஹோட்டல்களுக்கு சென்ற கடிதம் தொடர்பில் விசாரணை - பொலிஸ் தலைமையகம்!
வடக்கின் 5 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சர் ...
|
|
|


