இரத்த பரிசோதனைக்கு வரும் அதிகாரிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
Wednesday, May 10th, 2017
பரிசோதனைக்காக வரும் அதிகாரிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை அல்லது ஏனைய ஆவணங்களை பரிசோதிக்குமாறு சுகாதார பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வெவ்வேறு நோய்களை பரிசோதிப்பதற்காக பொதுமக்களிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்ள பலர் வீடுகளுக்கு வருவதாக இணையங்கள் ஊடாக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
நாட்டிலிருந்து யானைக்கால் நோயினை முற்றாக ஒழிக்கும் பொருட்டு குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சின் அனுமதியுடன் சுகாதார அதிகாரிகள் இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த இரத்த மாதிரி பரிசோதனைக்கு வரும் அதிகாரிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தி அவர்களின் கடமைகளுக்கு ஒத்துழைப்பும் வழங்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Related posts:
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ஈழமக்கள் ஜனநாயக கட்சி நடவடிக்கை!
பாரியளவிலான இயற்கை உர உற்பத்தியில் அம்பாறை பெருந்தோட்ட நிறுவனம் – 25 கிலோ இயற்கை உரம் 25 ரூபா வீதம் ...
மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் - அம...
|
|