இரண்டு நாள் விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை – பல்வேறு நிகழ்வகளிலும் பங்கேற்பு!
Saturday, March 19th, 2022இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றையதினம் மாவட்டத்தின் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றையதினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவு நாக விகாரை மற்றும் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
பிரதமரின் வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் பொலிசாரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்க துரித நடவடிக்கை - அமைச்சரவை அனுமதி!
நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறும் வாகன சாரதிகள் தனிமைப்படுத்தபடுவர் - பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!
|
|