இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாம் – அனில் ஜசிங்க எச்சரிக்கை!

Friday, June 19th, 2020

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் உலகின் எந்த நாடும் இரண்டாவது சுற்று வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதில்லை என இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சமூகத்தின் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் வைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அலட்சியம் செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இரண்டாவது சுற்று வைரஸ் தாக்கத்தினை தவிர்க்கவேண்டுமென்றால் உலக சுகாதார ஸ்தாபனமும் சுகாதார அமைச்சும் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வைரஸ் பரவுதலை ஆரம்பகட்டத்திலேயே முறியடித்துவிட்டது என தெரிவித்துள்ள அனில்ஜசிங்க எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து தலைதூக்கலாம் என தெரிவித்துள்ளார்

இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் கொரோனாவைரசிற்கான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் என்பதால் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் எப்போதும் இந்த வகையிலான அவதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அனில் ஜசிங்க தற்போது சமூக பரவல் இல்லை நாங்கள் ஆரம்பத்திலேயே வைரசினை தடுத்துநிறுத்தியுள்ளதால் அது மீண்டும் வராமலிருப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts: