இரண்டாம் கட்ட கொரோனா பரவும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர!

Sunday, September 20th, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் நாட்டில் தொடர்ந்தும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்வேண்டும் என தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்தும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் 200 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: