இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதன் மூலம் நன்மைகள் அதிகம் – அமைச்சர் எஸ்.பி.நாவின்ன!
Thursday, September 27th, 2018புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போர் இலங்கைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலேயே வசிக்காமல், அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிலையில், புலம்பெயர் நாடுகளில் வாழும் ஒருதொகுதியினருக்கு இன்று பிரஜாவுரிமை வழங்கி வைக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு இன்று பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
Related posts:
அச்சுவேலியில் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!
ஆறு மணிநேரம் செயல் இழப்பிற்கு பின்னர் வழமைக்கு திரும்பின!
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - டெல்லியின் நிலைப்பாடு இதுதா...
|
|