இரட்டை கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுரங்க ரயில்நிலையம் பிறகு திறப்பு!
Tuesday, September 11th, 2018அமெரிக்காவில் 2011-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தியதில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இரட்டை கோபுரங்கள் இடிந்து விழுந்தபோது அதன் அருகே இருந்த சுரங்க ரயில் நிலையமும் பலத்த சேதம் அடைந்தது. இதனால் அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த ரயில் நிலையம் சீரமைக்கும் பணியில் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து ஆணையம் ஈடுபட்டது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் குறித்த ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
Related posts:
ஜனாதிபதி செயலணி பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ!
புனர்வாழ்வு மையங்களுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு கடும் தண்டனை!
3,000 கிராம சேவகர் பிரிவுகளிள் வெற்றிடங்கள் - வாக்காளர்களை பதிவு செய்வதில் சிக்கல் என கிராம உத்தியோ...
|
|