இயக்கச்சியில் கோர விபத்து – இரு சகோதரிகள் பரிதாபப் பலி!
Saturday, July 28th, 2018இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்..இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் பளை – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-
வடமராட்சி கிழக்கு வத்தராயன் கிராமத்தை சேர்ந்த சுபாஸ்கரன் தமிழினி வயது 10 சுபாஸ்கரன் சுபாசினி வயது 4 ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சியிலுல் ஆலயமொன்றிற்கு பொற்றுறோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பும் போது ஏற்பட்ட வாகன விபத்திலேயே இவர்கள் இறந்ததாக தெரியவருகின்றது.
சிறுமிகளின் பெற்றுறோர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொர்பான விசாரணைகளை பளைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேலணை அராலிச் சந்தியில் விபத்து - கணவன் பலி, மனைவி படுகாயம்!
சுகாதார விதிமுறைகளை மீறிய ஆயிரத்து 240 முச்சக்கர வண்டிகள் கண்டறியப்பட்டது!
எதிர்வரும் திங்கள்முதல் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்...
|
|