இம்முறை 6012 மாணவர்களே சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி பெற்றனர்.
Tuesday, March 22nd, 2016கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்று தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6012 மாணவர்களே 9ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (20) ஊடகங்களுக்கு அவர் இதனைக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்
இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 274,324 பாடசாலை பரீட்சார்த்திகளில் 189,428 பரீட்சார்த்திகள் உயர்தரம் கற்க தகுதிப் பெற்றுக்கொண்டுள்ளனர். சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 69.33 வீதமான மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன், 83,796 மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடையவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
தேர்தலை நடத்த தயார் - மகிந்த தேசப்பிரிய!
இன்று உலக தபால் தின நிகழ்வுகள்!
ஊழல்அதிகரிப்பு: பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை - பொலிஸ் மா அதிபர்!
|
|