இம்மாத இறுதியிலிருந்து ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை!
Thursday, April 12th, 2018ஓட்டோக்களுக்கு கட்டண அறவீட்டு மீற்றர் பொருத்துவது இந்த மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளது என வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஓட்டோ சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.
கட்டண மீற்றர் கடந்த முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது சங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என ஓட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கூறினார்.
Related posts:
72 கொள்கலன்கள் சுங்கத்திணைக்களத்தால் தடுத்துவைப்பு..!
மன உளைச்சலே பெறுபேற்று வீழ்ச்சிக்கு காரணம் - இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஸ்டாலின் தெரிவிப்பு!
அனைத்து தேர்தல் மத்திய நிலையங்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை - சுகாதார அமைச்சு அறிவிப...
|
|