இன்று முதல் விசேட தொடருந்துச் சேவைகள்!

Thursday, April 12th, 2018

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட தொடருந்துச் சேவைகள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று இரவு 7.20க்கு கொழும்பில் இருந்து பண்டாரவளை வரை குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என தொடருந்து கட்டுப்பாட்டுமையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இன்று இரவு 10 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும், மாலை 6.50க்கு கொழும்பு கோட்டையில் இருந்து காலி வரையிலும் இரண்டு தொடருந்துகள்சேவையில் ஈடுபடுத்தப்படும்.

பிற்பகல் 1.55க்கு கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், மாலை 5.10க்கு மஹவயில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் இரண்டு விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

காலை 9.20க்கும் மற்றும் முற்பகல் 11.50க்கும் மருதானையில் இருந்து காலி வரையிலும் இரண்டு விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுவதுடன் 9.50க்கு காலியில் இருந்து மருதானைவரையிலும் தொடருந்து ஒன்றும் சேவையில் ஈடுபடும்.

அதேபோல், பிற்பகல் 2.55க்கு மருதானையில் இருந்து மாத்தறை வரையிலும் இரவு 7 மணிக்கு மாத்தறையில் இருந்து மருதானை வரையிலும் இரண்டு தொடருந்துகள் சேவையில் ஈடுபடும்.

அதேபோல் பிற்பகல் 1.15க்கும் மாலை 5.55க்கும் காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் இரண்டு தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்தொடருந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது

Related posts:


இழப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை உறுதிப்படுத்த தவறாது கலந்து கெள்ளுங்கள் – அமைச்சரின் இணைப...
சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் - விசாரணை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்!
பல்கலைக்கழக பட்டதாரிகள் இன்றுகூட அரசாங்க தொழில் வாய்ப்பையே எதிர்பார்த்து நிற்கிறார்கள் - இளைஞர் விளை...