இன்று பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, May 21st, 2024

தற்போது நிலவும் காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் இன்று (21) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களின்  சில இடங்களிலும் மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் பல பகுதிகளில் வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். அத்துடன் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களிலும் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலை காணப்படும்.

இலங்கைக்கு மேலாக மணித்தியாலத்திற்கு சுமார் 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இந்தநிலையில் பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஊரடங்கு உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது இலங்கை – சுகாதார சேவ...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து - இலங்கையின் சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஐக்கிய நாடுகள...
பொய்யான தகவல்களை கூறி பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்ய தூண்டும் சம்பவங்கள் அதிகரிப்பு – பொதுமக்க...