இன்று நள்ளிரவுமுதல் கோதுமை மாவின் விலை குறைப்பு – பாண் விலையும் 10 ரூபாவால் குறைவடைவதாக அறிவிப்பு!
Wednesday, March 8th, 2023இன்றுமுதல் (8) அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ப்றீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளன.
இதேவேளை, இன்று (8) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், 450 கிராம் அதாவது ஒரு இறாத்தல் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டுக் குழு அட்டகாசம் – இருவர் வைத்தியசாலையில்!
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!
வறிய நாடுகளில் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பில் மானிய அடிப்படையில் தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச ந...
|
|