இன்று நள்ளிரவுமுதல் கோதுமை மாவின் விலை குறைப்பு – பாண் விலையும் 10 ரூபாவால் குறைவடைவதாக அறிவிப்பு!
Wednesday, March 8th, 2023
இன்றுமுதல் (8) அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ப்றீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளன.
இதேவேளை, இன்று (8) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், 450 கிராம் அதாவது ஒரு இறாத்தல் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்12 மாவட்டங்களில் அமுலாகின்றது!
அறிவித்தலை இரத்து செய்வத ஜனாதிபதி !
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி!
|
|
|


