இன்றும் பல பாகங்களில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Monday, December 5th, 2022வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமற்போனவர்கள் தொடர்பாக நம்பிக்கையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - டக்ளஸ...
சமூகம் விழிப்படைந்தால் மட்டுமே வாள்வெட்டுகளைக் குறைக்கலாம் - ரெஜினோல்ட் குரே !
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்: நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த!
|
|