இன்றும் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Thursday, June 9th, 2022

நாடளாவிய ரீதியாக இன்றையதினமும் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே, 12.5 கிலோ கிராம், 5 கிலோம் கிராம மற்றும் 2.3 கிலோ சயைமல் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக் கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு அருகாமையில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.

3,900 மெற்றிக் டன் ஏற்றிய எரிவாயு நேற்று நாட்டை வந்தடைந்தது. அந்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: