இன்றுமுதல் புதிய தளர்வுகள் – திருமண நிகழ்வில் பங்கேற்போர் எண்ணிக்கையும் வரையறை!

Friday, October 15th, 2021

நாட்டில் இன்றுமுதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக் கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்ப டுகின்றன. நேற்று புதிய தளர்வுகளுடனான சுகாதார வழிகாட்டலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டார்.

அதன்படி, திருமண மண்டபத்தில் அனுமதிக்கப் படும் நபர்களின் எண்ணிக்கை 25 சத வீதம் வரை மட்டுப்படுத் தப்பட்டுள்ள அதேவேளை, அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக் கப்பட்டுள்ளது.

எனினும் திருமண மண்டபத்தில் மதுபான பாவனைக்கு விதிக்கப்ட்ட தடை தொடரும் என்றும், அனைத்து திருமணங்களும் பதிவுத் திருமணங்களாக மாத்திரமே நடத்த முடியும் எனவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

இதேவேளை இறுதிச்சடங்கில் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை, 15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், உணவ கங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 30 வீதம் வரையானவர்கள் அமர்ந்திருந்து உணவருந்த முடியும் என்பதுடன் மதுபானத் துக்கான தடை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை அதிகபட்சமாக 50 பேரைக் கொண்டதாக மண்டபத்தில் நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்களின் வரிப்பணத்தில் இன்னொரு விசாரணைக் குழுவா? மாகாண சபையின் விசாரணை அறிக்கை எங்கே?... மாநகரசபையில...
கடும் வறட்சி - 13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 71 யிரத்து 781 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்...
சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு - ஒத்துழைப்போருக்கு உதவிகளை ...