இன்றுமுதல் புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில்!

Thursday, December 16th, 2021

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று வியாழக்கிழமைமுதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, திருமணங்களில் மது வழங்குவதற்கான தடையும் இன்றுமுதல் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: