இனிவருங் காலங்களில் நாட்டில் ஹைபிரிட் லொக் – டவுன் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021

ஹைபிரிட் லொக்-டவுன் (Hybrid Lockdown) நடைமுறை தொடர்பில் இனிவரும் காலங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவசர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போதுள்ள முடக்க நிலைக்கு பதிலாக, ஹைபிரிட் லொக்-டவுன் (Hybrid Lockdown) முறையிலான முடக்க நிலையொன்றை அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும்.

நாளாந்த சம்பளத்திற்காக வேலை செய்வோர் தொடர்பில் மாத்திரமே கரிசனை செலுத்த வேண்டியுள்ளது. ஏனைய தரப்பினருக்கு வேலைகளை செய்துகொள்ளும் வகையிலான நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் கட்டிட நிர்மானம், வீதி புனரமைப்பு போன்ற அபிவிருத்திப் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வர்த்தக நிலையங்களை உரிய வகையில் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: