இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே ஆதரவு – இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட அறிவிப்பு!

Tuesday, September 26th, 2023

இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

கனடா முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானது என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், பயங்கரவாதம் குறித்து சிறிதளவு கூட சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தக் கூடாது எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: