இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் – இந்திய வெளிவிவகார செயலாளரிடம் ஜனாதிபதி உறுதி!

Wednesday, October 6th, 2021

இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது என இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ச தெரிவித்துள்ளார்

இந்திய வெளிவிவகார செயலாளருடனான சந்திப்பு நேற’;றையதினம் இடம்பெற்றது. இது குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது –

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களும், இரண்டு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதனை – இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம்  வலியுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில், காணப்பட்ட நட்புணர்வு மற்றும் தொடர்புகளை மீளக் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் என்று, அப்போதைய எமது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க முன்வைத்த யோசனையை செயற்படுத்துவதற்கான பலத்தை நாம் மேலும் அதிகரித்துக்கொள்ள – இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதனையும் அவரிடம் தெரிவித்திருந்த ஜனாதிபதி. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின் – குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டும் என்பது, இருவரதும் கருத்தாக அமைந்திருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக அடையாளம் காண்பதுடன், மீனவ சமுதாயத்துக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து, இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் காணப்படும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பிலும் நான் கருத்துத் தெரிவித்ததுடன், அவற்றுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்திய ஜனாதிபதி காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி எனக்கு நல்ல புரிதல் உள்ளதனையும் எடுத்துரைத்துள்ளார்..

இதனிடையே அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பு என்பதையும், அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி – புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பினை நான் விடுத்ததனையும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லா அவர்களுக்கு நான் நினைவூட்டியிருந்தார்..

வடக்கு ௲ கிழக்கு அபிவிருத்திக்காக எனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் நான் தெளிவுபடுத்தியதுடன் –

யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 வீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதனையும் அவரிடம் விளக்கினேன்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனையும், யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை உள்ளமை தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்ததாகவும் குறிபிபிட்ட ஜனாதிபதி இரண்டு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு எனக்கு இருப்பதால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் எவரும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள தான் இடமளிக்கப் போவதில்லை என்பதனையும் அவரிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: