இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம் – செப்டம்பரில் கடமைகளை பொறுப்பேற்பாரெனவும் தகவல்!
Monday, August 14th, 2023
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பரில் தனது கடமைகளை நிறைவு செய்யும் மிலிந்த மொரகொடவுக்குப் பின் அவர் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பதவியேற்கவுள்ளார்.
இதற்கமைய சேனுகா செனவிரத்ன தற்போது ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டு ஊடகப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகிறார்.
முன்னதாக அவர் வெளிவிவகார செயலாளராக பணியாற்றியதுடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஐக்கிய இராச்சியத்தில் உயர் ஸ்தானிகராகவும் பின்னர் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளை தற்போதைக்கு மீள திறக்கக் கூடாது - ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே...
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் கிடைக்க வ...
|
|
|


