இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொடருந்து பெட்டிகள்!
Friday, July 13th, 2018இந்திய தொடருந்து திணைக்களத்தினால் இலங்கைக்கு 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான தொடருந்து பயணப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமாக 78 நவீன தொடருந்துப் பெட்டிகள் அடங்கிய 6 தொகுதிகள் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 தொகுதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. ஏனையவை இந்த வருட இறுதிக்குள் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தொகுதியில் வளிபதனாக்கி பொருத்தப்பட்ட முதற்தர பயணப்பெட்டிகளும், 2ஆம் மற்றும் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளுமாக அமைக்கப்பட்டுள்ளன.
Related posts:
ஆயுத கடத்தல் - புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு!
தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள 4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் - கல்வி அமைச...
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!
|
|