இந்தியாவிலிருந்து இரண்டு மாதத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி!

Wednesday, November 8th, 2017

கடந்த இரண்டு மாத காலத்திற்குள் இந்தியாவிலிருந்து 1300மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பணிப்புரையின் பேரில் கடந்த 5 ஆம் திகிவரை  வரை(05) 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தொகை முழுவதும் சந்தைக்கு விநியோகத்திற்கென அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டரிசியானது கிலோகிராம் 74 ரூபாவுக்கு விற்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர், 25கிலோவிற்கு மேற்பட்ட அரிசியை கொள்வனவு செய்பவருக்கு கிலோ கிராம் 73 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ள 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசியில் 15ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவுக்கான கட்டளைகள் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் குறித்த தொகையான அரிசியானது இந்தமாத நடுப்பகுதியில் வந்து சேருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: