இந்தியாவின் கலாச்சார நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி!
Thursday, August 17th, 2017இந்தியாவின் 70ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் பிரபல இசைக் கலைஞர் பிரிகம் கோஷ் நிகழ்விற்கான இசை ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜனாதிபதி இசைக்குழுவினருக்கு பரிசில்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்
Related posts:
நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் பூட்டு!
முற்பதிவு ஒதுக்கீடு ஒக்டோபர் மாதம் வரை முழுமை - கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் குடிவரவு ...
|
|