இந்தியப் பிரதமரின் செயலக மட்ட உயரதிகாரிகள் மூவர் யாழ். விஜயம்!
Thursday, June 16th, 2016இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயலக மட்ட உயரதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் இன்று-16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை யாழ். குடாநாட்டிற்கு விஐயம் செய்தனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நவீனமயப்படுத்தப்பட்டு வரும் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கினைக் குறித்த குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டப் பணிகளையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
குறித்த குழுவினருடன் இந்தியத் துணைத் தூதுவர் அ.நடராஐன் மற்றும் தூதரக அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
Related posts:
ஊர்காவற்றுறை பால கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே...
வாக்காளர் அட்டைகள் மீளவும் ஒப்படைக்கப்படும்!
பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான சேதனப் பசளை உற்பத்தி முன்னெடுப்பு !
|
|