இணைய வசதியை இலங்கைக்கு கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவை ” மைனா ” என்கிறார்கள் – நாமல் ஆதங்கம்!

Sunday, October 16th, 2022

மகிந்த ராஜபக்சவால் இலங்கைக்கு இணைய வசதி கொண்டு வரப்பட்டதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற போது, நாட்டில் 5% மட்டுமே இணைய வசதி இருந்தது.

மகிந்த ராஜபக்சவால் கொண்டுவரப்பட்ட இணைய வசதியால் இளைஞர்கள் இன்று முகநூலில் அதிக நேரம் இருப்பதுடன், இணைய வசதியை கொண்டுவந்த மஹிந்தவை “மைனா” என விமர்சிப்பதுடன் என்னை “பொடி மைனா” என கூறுகின்றனர் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: