இடைநிலை வகுப்புகளில் இணைக்கும் சுற்றுநிருபம் ஏப்ரல் 20 இல் வெளியாகும் – அதுவரை கடிதங்கள் வழங்கப்படாது என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, April 17th, 2023

எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

அந்த வகையில், இடைநிலை வகுப்புகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அனைத்து தமிழ், சிங்கள அரசாங்க பாடசாலைகளும் தவணை அட்டவணைக்கு அமைய இன்று ஏப்ரல் 17ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக. கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் ரமழான் நோன்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து 1ஆம் தவணையின் முதற் கட்டத்திற்காக ஏப்ரல் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன

முன்பதாக கடந்த மார்ச் 24ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுக்கான 3ஆம் தவணை நிறைவடைந்திருந்தது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை கடந்த மார்ச் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை முதலம் தவணையின் முதற் கட்டம் ஏப்ரல் 04 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததோடு, சித்திரை புத்தாண்டுடன் இணைந்ததாக ஏப்ரல் 05 – 16 வரை விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2023 பாடசாலை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகளுக்காக இன்று ஏப்ரல் 17 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளன

இதேவேலளை முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மே 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

ஆனாலும் ஏற்கனவே மே 14 ஆம் திகதி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக விடுமுறை வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது மே 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த காலப் பகுதியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளுக்காக விடுமுறை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: