இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, October 21st, 2022

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேச ரீதியிலான டிஜிட்டல் அட்டை – அமைச்சர்களான நாமல், பவித்திரா ஆ...
நல்லூர் பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது – ஈ.பி.டி.ப...
பொதுமக்களுக்கான சேவைகளை எவ்வித தடையும் இன்றி வழங்குவதற்கு இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள் - ...