இடது பக்கத்தால் முந்திச் செல்வதற்கான தண்டப்பணத்தை மாற்ற அரசு இணக்கம்!
Monday, November 28th, 2016
இடது பக்கத்தால் முந்திச்சென்று பாதை ஒழுங்குகளை மீறும் வாகனங்களுக்கு விதிக்கப்படவுள்ள 25ஆயிரம் ரூபா தண்டப்பணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் கொழும்பில் நிதி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இடது பக்கத்தால் செல்லல் உட்பட 7 போக்குவரத்துக் குற்றச்செயல்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்கும் பிரேரணைகள் வரவு செலவுத்திட்ட யோசனையில் அரசாங்கம் முன்வைத்திருந்நதது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீதான தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை!
இருபாலையில் 72 இலட்சம் ரூபா செலவில் நீர்த்தாங்கிகள்!
தற்போது நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் புத்தாண்டு வரை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ...
|
|