ஆவாக்குளு அடாவடி: நீர்வேலியில் இருவர் படுகாயம்!

Monday, May 7th, 2018

யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவின் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று (07)  மாலை சாராமாரியாக வெட்டியுள்ளனர்.
அதே இடத்தினைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவா குழுவின் தலைவர் என்ற அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சாரமாறியாக வாளால் வெட்டியுள்ளனர்.

அண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக்குழுவினைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தம், ஆவா குழுவின் தலைவர் என்று அழைக்கப்படும் வினோத் மற்றும் ஏனைய 7 பேரும்  4 மோட்டார் சைக்கிளில் வெட்டியுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய மற்றைய நபர் கோவில் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர் என்றும் இந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக ; மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts: