ஆளுநர்களுக்கு மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கடுமையான உத்தரவு!
Monday, March 9th, 2020எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மாகாண ஆளுநர்கள் எந்தவொரு தேர்தல் பிரசாரங்களிலும் பங்கேற்கக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்
ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக மூன்று ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஒருவர் தமது பதவியில் இருந்து விலகுமாறு கோரப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
ஆளுநர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித உரிமைகளும் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே மஹிந்த தேசப்பிரிய இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்
Related posts:
சமூகத்தில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார ச...
தேய்ந்த வாகன டயர்களை மாற்றுவதற்கு சலுகைக் காலம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்!
|
|