ஆண்டின் முதல் அரையாண்டில் 252 மனித படுகொலை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Monday, July 23rd, 2018
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 252 மனித படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குடும்ப பிரச்சினைகள், தகாத உறவு, பாதாள உலக செயற்பாடுகள், பழிவாங்குதல், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டில் 452 மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டில் 3368 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 1503 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் 1732 பெண் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
கிளிநொச்சி குளத்தினை ஆழமாக்கப்படுவதனூடாகவே குடிநீர்த் தட்டுப்பாட்டைநிவர்த்திசெய்யமுடியுமெனசூழலியலாளர...
சுவரொட்டிகளை அகற்ற 758 இலட்சம் ரூபா நிதி பொலிஸாருக்கு ஒதுக்கீடு - தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற...
வீசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப...
|
|
|


