ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்கும் சுற்றறிக்கை வெளியானது!

Thursday, January 6th, 2022

அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு உரிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் 30 மற்றும் இந்த வருடம் ஜனவரி 3 ஆகிய திகதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இணங்க  குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், தேசிய சம்பளம் மற்றும் சம்பள ஆணைக்குழு மற்றும் நிதியமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டில் பயிலுனர்களாக சேர்த்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 51 ஆயிரத்து 682 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு இந்த வருடம் ஜனவரி 3 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்யாத பட்டதாரிகளுக்கு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: