ஆசிரியர்களது செயற்பாடுகளால் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இந்த தாமதம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த 6 இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து 69 ஆயிரம் பேர் அழகியல் கற்கைகளை தெரிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படவேண்டியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக, செயன்முறை பரீட்சைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும், தற்போது அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த செயற்பாடுகளில் இருந்தும் விலகுவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதன் காரணமாக, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


எங்களால் முடியும் என்பதை முடியும் என்றே கூறுவோம் – பருத்தித்துறையில் நாமல் எம்.பி. (வீடியோ இணைப்பு)
தேர்தலில் வெற்றிகாக அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுகின்றனர் - அமைச்சர் டலஸ் அழகப்...
தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சு அறி...