அல்லைப்பிட்டியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
Thursday, July 8th, 2021யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டி வீதியில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்!
சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில்!
மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் பதவியில் புலி உறுப்பினரின் உறவினர் நியமனம் - ஐக்கிய நாடுகளின் அமைதி...
|
|