அல்லைப்பிட்டியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
Thursday, July 8th, 2021
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டி வீதியில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
சகல அரச நிறுவனங்களை ஒரே வலையமைப்பில் - ஜனாதிபதி அவதானம்!
ஆளும் கட்சியின் துணை கொறடாவாக சாகர காரியவசம் நியமனம்!
மின்தடையை சீராக்க சீனாவில் இருந்து நிபுணர் வருகை - இலங்கை மின்சார சபையின் தலைவர் தகவல்!
|
|
|


