அர்ஜுன் மகேந்திரனுக்கு விரைவில் இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை?
Sunday, March 18th, 2018
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு விரைவில் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே அவருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் சிங்கபூரில் வசிப்பதாக கூறப்படுகின்ற நிலையில், இலங்கை பொலிஸாரின் சர்வதேச பிரிவின் ஊடாக அவருக்கான பிடிவிராந்து உத்தரவு இன்டர்போலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் நிறைவடைந்த பின்னர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு!
ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை - அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ...
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்...
|
|
|


