அரச வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளது பாடசாலை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி!
Thursday, September 29th, 2016
அரச வைத்திய அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, அவர்களது பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமம் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றையதினம்(28) சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், குறுகிய அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் சில தீர்மானங்களை எடுப்பதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், ஜனாதிபதியிடம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் நலிந்த சொய்சா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
10 மாதங்களில் ரயில் விபத்துக்களால் 180 பேர் பலி!
இரண்டு தீவிரவாத அமைப்புகளை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை!
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரியுங்கள் – உள்ளூர் உற்பத்தியாளர்கள் கோரிக்க...
|
|
|


